வீரமாங்குடி மண்ணின் மைந்தர்கள்
முதலில் நாம் பார்க்க இருப்பது திரு.கணேசன் அவர்களை
- ஒரு ஊர் வளமையுடனும், புகழுடனும் இருக்க மண்ணை சார்ந்த மனிதர்களும் ஒரு காரணம்.
- பொதுவாக படிப்பு, தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் தேடி மண்ணை விட்டு மனிதன் இடம்பெயருவது வாடிக்கை.
- கிராமங்களின் முக்கிய தொழிலாய் கருதப்படுவதும், மக்களின் உயிர் மூச்சாய் இருக்கும் உணவை, உற்பத்தி செய்வதுமான விவசாய தொழில் இன்று போதுமான ஆட்கள் இன்றியும், நீர் பாசன வசதி குன்றியும், நலிவடைந்து வரும் நிலையில், மாற்று காரணி தேடி மண்ணை விட்டு இடம்பெயர்வோர் இன்று அதிகம்.
- அத்தகைய எந்த மாற்றம் வந்தாலும் மண்ணை மக்களையும் பிரியா மண்ணின் மைந்தர்கள் இன்னும் கிராமங்களில் இருக்கிறார்கள்.
- இவர்களின் பிறப்பு, வளர்ப்பு மட்டும் இன்றி இறப்பும் பிறந்த மண்ணிலே வேண்டும் என்ற கொள்கைகளோடு வாழ்வார்கள்.
- சொந்த பிள்ளை வீடேயானாலும் நகர்புறத்தில் இவர்களால் ஓரிரு நாட்களுக்கு மேல் தங்குவது கடினம்.
- விஞ்ஞான வளர்ச்சியாலும், அறிவியல் முன்னேற்றத்தினாலும் தொழில் துறையில், நகர்ப்புறங்களின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்தாலும். கிராமங்களின் நிலை தாழ்ந்து போகாமல் இருக்க முதுகெலும்பாய் இருக்கும் காரணிகள் இவர்கள்.
- இவர்கள்தான் நம் மண்ணின் மைந்தர்கள். அத்தகைய நம் வீரமாங்குடி மண்ணின் மைந்தர்களை வெளிச்சம் போட்டு காட்டும் கட்டுரைதான் வீரமாங்குடி மண்ணின் மைந்தர்கள்.
*******************************************************************************************
- வடபாலிமங்கலம் ஆலையில் ஏழு ஆண்டுகள் அலுவலர் பணி.
- வீரமாங்குடி கிராம நிர்வாகத்திற்காக கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ரூ.1700 சம்பளத்திற்கு இவர் ஆற்றியது பணி அல்ல அர்பணிப்பு என்றே சொல்லலாம்.
- தண்ணீர் குழாயில் தண்ணீர் வரவில்லை, தெரு விளக்கு எரியவில்லை, மின்சாரம் துண்டிப்பு என எத்தனை பிரச்சனைகள் என்றாலும் கிராம பஞ்சாயத்து தலைவரை விட, கணேசனை கூப்பிடுங்கப்பா என உரிமையோடு கிராம மக்கள் அறிந்த ஒருவராய் இருந்தது இவரது உழைப்பிற்கு எடுத்துகாட்டு.
- ஞாயிற்று கிழமைகளில் மாலையில் தமிழ் திரைப்படம் பார்க்க, வெள்ளிகிழமைகளில் இரவில் ஒளியும் ஒலியும் பார்க்க கூட்டம் கூட்டமாய் கூடும் கிராமமக்களின் எதிர்பார்க்கும் முகமாய் மந்தவெளியின் தொலைகாட்சி இயக்குனராய் நன்கு அறியப்பட்டவர்.
- இதுமட்டுமில்லாது வடக்கு தெரு அன்னமடத்தில் சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் மேடை நாடகத்தில் இவரது பங்களிப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை. சிவபுராணம், ராமாயணம், மகாபாரதம் என அத்தனை புராணங்களும், இதிகாசங்களும் இவருக்கு அத்துபுடி.
- எண்பது வயதை கடந்தும் இன்றும் சைக்கிளை மிதித்து செல்லும் உடல் நலம் இறைவனின் ஆசிர்வாதம். இன்று இவரது துணைவியாருடன் இயற்கை சூழ்ந்த வயல்வெளியில் அமையபெற்ற தனது இல்லத்தில் வசித்து வருகிறார்.
*******************************************************************************************
இரண்டாவதாக நாம் பார்க்க இருப்பது திரு.கலியபெருமாள் அவர்களை
- மண்ணின் மைந்தர்கள்
- வீரமாங்குடி சின்னத்தெரு திரு.கலியபெருமாள் வாண்டையார் அவர்கள்
- 90ஸ் கிட்ஸ் மிட்டாய்களை வீரமாங்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சேரும்.
- தள்ளாத வயதிலும் இறக்கும் தருவாயில் கூட குழந்தைகளின் மகிழ்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு வீரமாங்குடி மந்தைவெளியில் கிட்டதட்ட 30வருடங்களுக்கு மேல் வணிகம் செய்து வந்த பெருமை இவரையே சேரும்.
- இவர் வெளியில் செல்லும் போது கூட மக்கள் பயனுறும் வகையில் கடையை மந்தைவெளியில் திறந்து வைத்தே சென்று விடுவார்.
- மக்கள் தேவையான பொருட்களை எடுத்து உரிய சில்லறையை வைத்து விட்டு செல்வர் அந்த அளவிற்க்கு வணிகத்தில் நம்பிக்கையும் நாணயத்தையும் விதைத்த மண்ணின் மைந்தர்களின் ஒருவர்.
*******************************************************************************************
- இது போன்ற நம் மண்ணிற்கு வரமாயும் முதுகெலும்புமாயும் வாய்க்க பெற்றவர்களால் தான் நம் கிராமம் இன்றும் முதன்மை கிராமமாய் இருப்பதில் ஐயமில்லை - மிறன்.ஜி
No comments:
Post a Comment